×

கலெக்டர் பிரவீன் பி நாயர் வழங்கினார் அனைத்து தரப்பு மக்களுக்காக எப்போதும் சேவை செய்வேன் காரைக்கால் புதிய கலெக்டர் அர்ஜூன் சர்மா உறுதி

காரைக்கால், பிப். 18: காரைக்கால் மாவட்ட அனைத்து தரப்பு மக்களுக்காக எப்போதும் சேவை செய்வேன் என மாவட்ட புதிய கலெக்டராக பதவியேற்ற அர்ஜூன் சர்மா தெரிவித்துள்ளார். காரைக்கால் மாவட்ட சப் கலெக்டராகவும், திருநள்ளாறு தர்பாராண்யேஸ்வரர் கோயில் நிர்வாக அதிகாரியாகவும், புதுச்சேரி மின்திற குழுமம் மற்றும் ஜெயபிரகாஷ் நாராயணன் நூற்பாலை மேலாண் இயக்குனராகவும், மாவட்ட கலெக்டராகவும் சிறப்பாக பணியாற்றி, அனைத்திற்கும் மேலாக நம் நீர் திட்டம் மூலம் காரைக்காலை உலககறிய செய்த விக்ராந்த்ராஜா, புதுச்சேரி முதல் அமைச்சரின் செயலராக பணி இடம் மாற்றம் செய்யப்பட்டார்.

தொடர்ந்து, புதுச்சேரியில் பணியாற்றி வந்த அர்ஜூன் சர்மா நேற்று மாலை மாவட்ட கலெக்டராக பதவியேற்றுகொண்டார். புதிய கலெக்டரிடம், விக்ராந்த்ராஜா பொறுப்புகளை முறைப்படி ஒப்படைத்தார். இந்நிகழ்ச்சியில், துணை கலெக்டர்கள் ஆதர்ஷ், பாஸ்கரன், மாவட்ட போலீஸ் எஸ்பிக்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். தொடர்ந்து புதிய கலெக்டர் அர்ஜூன்சர்மா பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது: இதுவரை கலெக்டராக இருந்த விக்ராந்த்ராஜாவின் மக்கள் பணிகளை தொடர்ந்து செய்வேன். நல்ல குழு ஒன்று காரைக்காலில் உள்ளது. அனைத்து தரப்பு மக்களுக்காக எப்போதும் சேவை செய்வேன் என்றார்.

Tags : Arjun Sharma of Karaikal ,
× RELATED பதற்றமான வாக்குச்சாவடிகளில் பணியாற்ற...