கரூர், பிப்.18: கரூரில் ஓய்வுபெற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு குறைந்தபட்ச பென்சன் ரூ.7,850, அகவிலைப்படி குடும்பஓய்வூதியம், மருத்துவப்படி, ஈமக்கிரியை, செலவுநிதி உள்ளிட்டவற்றை வழங்கி வாழ்வாதாரத்தை பாதுகாக்கக்கோரி சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தாந்தோணி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டசெயலாளர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். மாவட்டதலைவர் கண்ணப்பன், அரசுஊழியர்சங்க மாவட்டதலைவர் சுப்பிரமணியன், நிர்வாகிகள்கோதண்டன், பெருமாள், மாலதி, நு£ர்ஜகான், சுந்தரராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதேபோன்று கரூர் ஒன்றியம் உள்ளிட்ட அனைத்து ஒன்றிய அலுவலகங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.