×

மொபைல் கடை உரிமையாளருக்கு பாட்டில் குத்து

திருப்பூர்,பிப்.18: திருப்பூர் போயம்பாளையத்தை அடுத்த குருவாயூரப்பன்நகர் கருப்பராயன் கோயில் வீதியை சேர்ந்தவர் அன்பழகன் (35). இவர், மொபைல் உதிரி பாகங்கள் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், 15ம் தேதி இரவு அன்பழகன் பிச்சம்பாளையம் அருகே பைக்கில் வந்தபோது அவரை வழிமறித்த 4 பேர் கொண்ட கும்பல் அவரை பாட்டிலால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த அன்பழகன் சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் அனுப்பர்பாளையம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். இதில் அன்பழகனை தாக்கியது பனியன் பியூசிங் நிறுவனம் நடத்தி வரும் மணி மற்றும் அவருடைய நிறுவனத்தில் பணியாற்றும் அருண்குமார், முத்து, சங்கர் உள்ளிட்ட 4 பேர் என்பது தெரியவந்தது. இதையடுத்து சங்கரை கைது செய்தனர். தலைமறைவாகி விட்ட மணி, முத்து, அருண்குமார் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags : store owner ,
× RELATED வாடிக்கையாளர்களை பார்த்து...