×

வேதை சாலை சீனிவாசராவ் ஆர்ச் அருகே கட்டிமுடித்த மின்மயானத்தை திறக்க கோரி நூதன போராட்டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவு

திருத்துறைப்பூண்டி, பிப்.18: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர குழு கூட்டம் மாவட்ட குழு உறுப்பினர் சாமிநாதன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட குழு உறுப்பினர் சுப்ரமணியன் முன்னிலை வகித்தார். போராட்டம் குறித்து நகர செயலாளர் ரகுராமன் விளக்கி பேசினார். கூட்டத்தில் நகர குழு உறுப்பினர்கள் சுப்ரமணியன், கோபு, வேதரெத்தினம், தண்டபாணி, ஜெயப்பிரகாஷ், செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் முற்றிலும் முடங்கி போன நகராட்சியை கண்டித்தும் வேதை சாலை சீனிவாசராவ் ஆர்ச் அருகில் கட்டி முடிக்கபட்டு திறக்கப்படாமல் உள்ள மின் மயானத்தை திறக்க கோரியும், சிங்களாந்தி 24 வது வார்டு சுடுகாட்டு சாலையை அமைக்க கோரியும், இரயில்வே கேட் மேட்டுத் தெரு இணைப்பு முள்ளியாற்றங்கரை சாலையை அமைக்க கோரியும், நகர் முழுவதும் குண்டும் குழியுமாக காட்சியளிக்கும் சாலைகளை உடனடியாக அமைக்க கோரியும், நகரில் உள்ள அனைத்து குளங்களையும் தூர் வாரிசுத்தம் செய்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும், நகரின் அனைத்து மின் விளக்குகளையும் சீரமைத்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 24ம் தேதி பாடைகட்டி ஊர்வலமாக சென்று நகராட்சி முன்பு நூதன போராட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Tags : Communist Party of India (Marxist) ,Vani Road Srinivasa Rao Arch ,
× RELATED தமிழகம் முழுவதும் விற்பனைக்கு...