×

காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி இளம்பெண்ணிடம் பழகி திருமணம் செய்ய மறுப்பு காதலனின் பெற்றோர் கைது

திருவண்ணாமலை, பிப்.18: திருவண்ணாமலையில் இளம்பெண்ணிடம் காதலிப்பதாக ஆசை வார்த்ைத கூறி, இளம்பெண்ணிடம் பழகி திருமணம் செய்ய காதலன் மறுத்துள்ளார். இதன்தொடர்பாக காதலனின் பெற்றோரை ேபாலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.திருவண்ணாமலை-அவலூர்பேட்டை சாலையில் வசித்தவர் 25 வயது இளம்பெண். இவரும் திருவண்ணாமலை-போளூர் ரோட்டில் வசித்த கேமராமேன் விவேக்பாரதியும்(27) காதலித்து வந்தனர். அப்போது இளம்பெண்ணை சோமாசிபாடி, திருவரங்கம் போன்ற ஊர்களுக்கு அழைத்து சென்று இளம்பெண்ணிடம் தனிமையில் இருந்துள்ளார்.இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி இளம்பெண், விவேக்பாரதியிடம் கேட்டதற்கு திருமணம் செய்து மறுத்ததாக கூறப்படுகிறது. இதற்கு விவேக்பாரதியின் தந்தை செங்குட்டுவன்(60), தாயார் விஜயராணி(50) சகோதரி மாலதி(29) ஆகியோர் உடந்தையாக இருந்தார்களாம்.இதுகுறித்து நேற்று முன்தினம் திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இளம்பெண் புகார் செய்தார். அதனபேரில் இன்ஸ்பெக்டர் தமிழரசி வழக்குப்பதிந்து விவேக்பாரதியின் தந்தை செங்குட்டுவன், தாயார் விஜயராணி ஆகியோரை கைது செய்தார். மேலும், தலைமறைவாக உள்ள விவேக்பாரதி, மாலதி ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags : Lover ,parents ,
× RELATED ஓடிடியில் வெளியாகிறது ‘லவ்வர்‘!