×

முத்துரங்கம் அரசு கல்லூரி சார்பில் நாட்டு நலப்பணி திட்ட முகாமில் கோயிலை சுத்தம் செய்த மாணவர்கள்

அணைக்கட்டு, பிப்.18: முத்துரங்கம் அரசு கல்லூரி சார்பில் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாமில் பாழடைந்த பெருமாள் கோயில் மாணவர்கள் சுத்தம் செய்தனர்.வேலூர் முத்துரங்கம் அரசு கலை கல்லூரி சார்பில் முதல் மற்றும் 2ம் ஆண்டு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கான நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் நேற்று தொடங்கி 23ம் தேதி வரை நடக்கிறது.இதற்கான தொடக்க விழா விழிப்புணர்வு ஊர்வலம் பென்னாத்தூரில் நேற்று நடந்தது. நாட்டு நலப்பணி திட்ட அலுவலரும், கல்லூரி வேதியியல் பேராசியருமான வெங்கடேஷ் தலைமை தாங்கினார். தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் அருள்நாதன், திட்ட அலுவலர்கள் தமிழ்செல்வன், கயல்விழி முன்னிலை வகித்தனர்.இதில் நாட்டு நலப்பணி திட்ட மாணவ, மாணவிகள் ஊர்வலமாக சென்று பென்னாத்தூர் பகுதியில் பாழடைந்து கிடந்த பெருமாள் கோயில் மற்றும் பள்ளி அருகே சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

Tags : Government College ,Mutturangam ,
× RELATED திருவாடானை அரசு கல்லூரியில் இரண்டாம் கட்ட பயிற்சி முகாம்