×

சீட் பிடிப்பதில் தகராறு நாகர்கோவிலில் ரயிலில் வாலிபருக்கு கத்திக்குத்து

நாகர்கோவில், பிப்.18 : நாகர்கோவிலில் ரயிலில் ஏற்பட்ட மோதலில் குமரி வாலிபரை கத்தியால் குத்திய, வட மாநில வாலிபரை போலீசார் கைது செய்தனர்.களியக்காவிளை பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்பவர், நாகப்பட்டிணத்தில் நடைபெறும், ராணுவ ஆள் சேர்ப்பு முகாமில் கலந்து கொள்ள நேற்று காலை குருவாயூரில் இருந்து சென்னை செல்லும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலில், திருச்சிக்கு சென்று கொண்டு இருந்தார். குழித்துறை ரயில் நிலையத்தில் இருந்து இவர் ரயில் ஏறினார். காலை 5.45 மணியளவில் ரயில், நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்துக்கு வந்தது. நேற்று வாரத்தின் முதல்நாள் என்பதால், திருநெல்வேலி, மதுரை, திருச்சிக்கு செல்ல  இந்த ரயிலில் கூட்டம் அதிகமாக இருந்தது. அப்போது இந்த ரயிலில் ஏறிய, அசாம் மாநிலத்தை சேர்ந்த கார்த்தி தாஸ் (41) என்பவருக்கும், ராஜேசுக்கும் தகராறு ஏற்பட்டது.

இந்த தகராறில் ஆத்திரம் அடைந்த கார்த்தி தாஸ், திடீரென தான் வைத்திருந்த கத்தியால், ராஜேசின் கழுத்தில் கிழித்தார். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தை பார்த்ததும் மற்ற பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து ரயில்வே போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். ரயில்வே போலீசார் சென்று, கார்த்தி தாசை பிடித்து காவல் நிலையம் கொண்டு வந்தனர். ராஜேசை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ராஜேஷ் அளித்த புகாரின் பேரில், வழக்கு பதிவு செய்து கார்த்தி தாசை கைது செய்தனர். விசாரணையில் இவர் திருவனந்தபுரத்துக்கு செல்ல வேண்டியவர் என்பதும், ரயில் மாறி ஏறியதும் தெரிய வந்தது.


Tags : Arrest ,Nagercoil ,
× RELATED வங்கதேசத்துக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்றதாக சேலையூர் எஸ்.ஐ. கைது!!