×

சமையல் எரிவாயு விலை உயர்வு காங். கண்டன ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர், பிப்.18:  திருவள்ளூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் பூவை பீ.ஜேம்ஸ்  அறிக்கை:   தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர்  கே.எஸ்.அழகிரியின் அறிவுறுத்தலின் படியும். செயல் தலைவர் டாக்டர் கே.ஜெயக்குமார் எம்பி ஆலோசனையின் பேரிலும் திருவள்ளூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை உயர்வை கண்டித்து இன்று (18ம் தேதி) காலை 10 மணியளவில் திருநின்றவூர், காந்தி சிலை அருகில் ஆர்ப்பாட்டம்  எனது தலைமையில்  நடைபெற உள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள், வட்டார, நகர, பகுதி, வட்ட, கிராம தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் துணை அமைப்புகளின் நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags :
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம்...