×

திருவேற்காட்டில் கடையின் பூட்டை உடைத்து 4 செல்போன்கள் திருட்டு

பூந்தமல்லி, பிப். 18:சென்னை திருவேற்காடு அடுத்த வீரராகவபுரத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார்(39). காடுவெட்டி பகுதியில் செல்போன் சர்வீஸ் செய்யும் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு கடையை மூடி விட்டு வீட்டிற்க்கு சென்றுவிட்டார். நேற்று காலை வழக்கம்போல் கடையை திறக்க வந்தபோது கடையின் ஷட்டரில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு இருந்துள்ளது. இதுகுறித்து திருவேற்காடு போலீசாருக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அந்த கடையில் சோதனை செய்தனர். அப்போது மர்ம நபர்கள் பூட்டை உடைத்து சர்வீஸ்க்கு வைத்திருந்த 4 செல்போன்களை திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.    


Tags :
× RELATED நடப்பு நவரை பருவத்தில் முதற்கட்டமாக 8...