×

மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை

தாம்பரம், பிப்.18: தாம்பரம் பகுதியில் மாணவர்களுக்கு கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.தாம்பரம் அருகே சேலையூர் மற்றும் கிழக்கு தாம்பரம் பகுதிகளில் உள்ள தனியார் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ரகசியமாக தொடர்ந்து கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக தெற்கு மண்டல இணை ஆணையர் மகேஸ்வரிக்கு தொடர்ந்து புகார்கள் சென்றன. இதையடுத்து இணை ஆணையர் தலைமையிலான தனிப்படையினர், சம்பந்தப்படட் பகுதியில் தீவிரமாக கண்காணித்தனர்.அப்போது, கல்லூரி மாணவர்கள் சிலரிடம், தனிப்படை போலீசார் ரகசியமாக விசாரணை நடத்தினர். அதில், குரோம்பேட்டை, அஸ்தினாபுரம், காயத்திரி நகரை சேர்ந்த சத்தியநாராயணன் (21) என்பவர், கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்தது தெரிந்தது.
இதையடுத்து போலீசார், நேற்று சத்தியநாராயணனை சுற்றி வளைத்து கைது செய்தனர். அவரிடம் இருந்து 70 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.


Tags :
× RELATED காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில்...