×

நாளை தொழிற்பழகுநர்களுக்கான ஆள்சேர்ப்பு முகாம்

செங்கல்பட்டு, பிப்.18: செங்கல்பட்டு கலெக்டர் ஜான்லூயிஸ் வெளியிட்டுள்ள அறிக்கை.செங்கல்பட்டு மாவட்டம் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை சார்பில் தொழிற்பழகுநர்ளுக்கான ஆள்சேர்ப்பு முகாம் நாளை (19ம் தேதி) காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை, செங்கல்பட்டு அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெற உள்ளது.அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி முடித்து தேர்ச்சி பெற்ற பயிற்சியாளர்களுக்கு மத்திய, மாநில மற்றும் தனியார் தொழில் நிறுவனங்களில் தொழில்பழகுனர் பயிற்சிபெற ‘‘தொழிற்பழகுநர்ஆள்சேர்ப்பு முகாம்’’  நடைபெற்ற உள்ளது. இதில் பல முன்னணி தொழில் நிறுவனங்கள் கலந்து கொண்டு, தொழில்பழகுநர் பயிற்சி திட்டத்தின்கீழ் பயிற்சியாளர்களை   தேர்வு செய்கின்றன. மேலும் இப்பயிற்சி முடித்து சான்றிதழ் பெற்றால் மத்திய, மாநில அரசு நிறுவனங்களில் முன்னுரிமை அடிப்படையிலும், தனியார் நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டிலும் வேலைவாய்ப்பு பெறலாம். எனவே இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளவும் என கூறப்பட்டுள்ளது.

Tags : Recruitment camp ,professionals ,
× RELATED சுவிட்சர்லாந்தில் ‘தி ரைஸ் – எழுமின்’...