×

அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு

கிருஷ்ணகிரி, பிப்.17: ராயக்கோட்டை தக்காளி மண்டி அருகில் உள்ள ஒரு நர்சரி பண்ணை அருகில், சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் சடலமாக கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் ராயக்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர், எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags :
× RELATED சூதாடிய 3 பேர் கைது