×

முக்குராந்தல் பகுதியில் மூடப்பட்ட கழிப்பறையை திறக்குமா நகராட்சி ?

சாத்தூர், பிப்.17: சாத்தூர் முக்குராந்தல் பகுதியில் மூடப்பட்டுள்ள கழிப்பறையை திறக்க உடனே நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சாத்தூர் நகராட்சி சார்பில் பொதுமக்கள் நலன்கருதி முக்குராந்தல், நகராட்சி காலனி அருகே இரண்டு கழிப்பறைகள் கட்டப்பட்டன. சந்தை உள்ளிட்ட பகுதிகளுக்கு வரும் பொதுமக்கள் நலன்கருதி இந்த இரண்டு இடங்களிலும் கழிப்பறை கட்டப்பட்டன. அவை சில நாள்கள் மட்டுமே செயல்பட்டு வந்துள்ளன. முக்குராந்தல் பகுதியில் பல நாள்களாக செயல்பட்டு வந்த கழிப்பறை தற்போது நகராட்சி நிர்வாகத்தால் சீரமைப்பு பணிக்காக பூட்டப்பட்டது.

ஆனால், ஒரு வருடத்திற்கு மேலாகியும் இதுவரை இந்த கழிப்பறை சீரமைக்கப்படவில்லை. இதனால் பல்வேறு பகுதியிலிருந்து நகர் பகுதிக்கு வரும் பொதுமக்கள் கழிப்பறை இல்லாமல் அவதியடைந்து வருகின்றனர். இப்பகுதி கடை உரிமையாளர்கள், பொதுமக்களும் இந்த கழிப்பறையை விரைவில் திறக்க பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் தெரியப்படுத்தியும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, பொதுமக்கள் நலன் கருதி முக்குராந்தல் பகுதியில் உள்ள கழிப்பறையை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என நகராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். Postal Regn No. MA /03/2018 - 2020

Tags : area ,Mukkurandal ,
× RELATED கர்நாடகாவில் வாகன சோதனையின்போது 1,200...