×

பெரியகுளம் கண்மாயில் தடுப்புச்சுவர் தேவை

திருவில்லிபுத்தூர், பிப்.17: திருவில்லிபுத்தூர் பெரியகுளம் கண்மாய் கரையில் தடுப்புச்சுவர் இல்லாததால் விபத்து அபாயம் நிலவுகிறது.
திருவில்லிபுத்தூரில் உள்ள பெரியகுளம் கண்மாய் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கண்மாய்களில் மிகப்பெரியதாகும். இந்த கண்மாயின் கரையில் தடுப்பு சுவர் இல்லாததால் விபத்து ஏற்படும் வாய்ப்பு உள்ளது. ஏனெனில், திருவில்லிபுத்தூர் சந்தை கிணற்று தெருவிலிருந்து கம்மாபட்டி மற்றும் சீனியாபுரம், மம்சாபுரம் மற்றும் பல்வேறு பள்ளிகளுக்கு மாணவர்கள் சென்று வருகின்றனர். எனவே, விபத்து அசம்பாவிதம் ஏற்படும் முன் இந்த பகுதியில் தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Periyakulam ,
× RELATED வத்தலக்குண்டு- பெரியகுளம் சாலையில் மின் விளக்குகள் இல்லாததால் அவதி