×

வத்தலக்குண்டுவில் சென்னை தடியடியை கண்டித்து ஆர்ப்பாட்டம்

வத்தலக்குண்டு, பிப். 17: வத்தலக்குண்டுவில் தமுமுகவினர் சென்னை தடியடியை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். வத்தலக்குண்டுவில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமுமுக நகர தலைவர் இம்தியாஸ் தலைமை வகித்தார். மனிதநேய மக்கள் கட்சி நகர செயலாளர் அலாவுதீன் முன்னிலை வகித்தார். தலைமை கழக பேச்சாளர் திருச்சி ஜாபர் அலி, மாவட்ட பொறுப்பாளர் முகமது ரிஜால், முன்னாள் மாவட்ட துண அமைப்பாளர் கனவா பீர் ஆகியோர் பேசினர்.

கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டனர். தமுமுக, மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டம் ஒரு மணி நேரம் நடந்தது. பாதுகாப்பு பணிகளை வத்தலக்குண்டு இன்ஸ்பெக்டர் பிச்சை பாண்டியன் தலைமையில் போலீசார் செய்திருந்தனர்.

Tags : Vattalakundu ,protests ,Chennai ,
× RELATED எதிர்ப்பு அலையால் மக்களை...