வத்தலக்குண்டு, ஜன. 17:வத்தலக்குண்டு அருகே பள்ளி ஆண்டு விழா மாணவர்களை அவர்கள் போக்கில் விட்டு பிடிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர் ரவீந்திரன் பேசினார். வத்தலக்குண்டு அருகே வெங்கிடாஸ்திரி கோட்டை கொன்னம்பட்டி ஸ்ரீராம் உயர்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா நடந்தது. பள்ளி முதல்வர் சாந்தி தலைமை வகித்தார். தாளாளர் ரமேஷ் ராஜா வரவேற்றார். சிறப்பு விருந்தினராக திண்டுக்கல் துணை ஆட்சியர் ராஜ்குமார் கலந்து கொண்டு பேசினார். சமூக ஆர்வலர் அரிமா சங்க முன்னோடி டாக்டர் ரவீந்திரன் பேசினார்.
அப்போது பெற்றோர்கள் மாணவர்களுக்கு நெருக்கடி கொடுக்க க்கூடாது அவர்கள் போக்கில் விட்டு பிடிக்க வேண்டும் அவர் திறமையறிந்து மேம்படுத்த வேண்டும்’ என்றார்.கொடைக்கானல் சமூக ஆர்வலர் ஆஷா ரவீந்திரன் பரிசு வழங்கினார். கலை நிகழ்ச்சிகள் நடந்தது. ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவ, மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் தங்கத்துரை நன்றி கூறினார்.