×

ஆசை வார்த்தை கூறி உல்லாசம் காதலியை திருமணம் செய்ய மறுத்த வாலிபருக்கு வலை

சேலம், பிப்.17: சேலத்தில் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு, காதலியை திருமணம் செய்ய மறுத்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
சேலம் டவுன் கணக்கர் தெருவை சேர்ந்தவர் ராஜா. இவரது மகள் நிவேதா(23). இவருக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக, கணவரை பிரிந்து வந்த நிவேதா, தனது பெற்றோருடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில், சேலம் புதிய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் வேலைக்கு சென்ற இடத்தில், ஜான்சன்பேட்டை கன்னங்காடு பகுதியை சேர்ந்த விக்னேஷ்(25) என்பவருடன் நிவேதாவுக்கு பழக்கம் ஏற்பட்டது.  இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதையடுத்து, திருமணம் செய்து ெகாள்வதாக கூறி, நிவேதாவிடம் விக்னேஷ் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. விரைவில் திருமணம் செய்து கொள்வதாக கூறியதால், விக்னேசுக்கு பைக் மற்றும் ₹1 லட்சம் பணத்தை நிவேதா கொடுத்துள்ளார்.
இந்நிலையில், சமீப காலமாக விக்னேஷின் நடத்தையில் மாற்றம் ஏற்பட்டது. நிவேதாவுடன் பேசுவதை அவர் தவிர்த்து வந்தார். இதனால், தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி நிவேதா கேட்ட போது, மறுப்பு தெரிவித்தார். இதனால் மனமுடைந்த நிவேதா, விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை உறவினர்கள் மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வரும் நிவேதா அளித்த புகாரின் பேரில், ஆசைவார்த்தை கூறி இளம்பெண்ணை ஏமாற்றி விக்னேஷ் மீது,
சேலம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனியம்மாள், 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தார். மேலும், தலைமறைவாக உள்ள விக்னேசை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags : lover ,
× RELATED ஓடிடியில் வெளியாகிறது ‘லவ்வர்‘!