×

நல்லம்பள்ளி அருகே அரசு பள்ளியில் சேதமான மேற்கூரை

நல்லம்பள்ளி, பிப்.17: நல்லம்பள்ளி அருகே அரசு பள்ளியில் சேதமடைந்த மேற்கூரையை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர ேவண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நல்லம்பள்ளி அருகே பாகல்பட்டியில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளி கட்டிடத்தின் மேல்கூரை ஓடுகள் உடைந்து சேதமடைந்த நிலையில் இருந்தது. இதனால் கடந்த 2015ம் ஆண்டு, பள்ளி அருகே புதிய கட்டிடம் கட்டப்பட்டு பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் மேற்கூரை சேதமடைந்த பள்ளிக்கட்டிடம் பயனற்ற நிலையில் உள்ளதால், பள்ளி மாணவர்கள் விளையாடும் போது, அவர்கள் மீது உடைந்த ஓடுகள் விழுந்து காயமடைவதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே, சேதமடைந்த பள்ளியின் மேற்கூறையை சீரமைத்து, பயன்பாட்டிற்கு கொண்டு வர, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க ேவண்டும் என அப்பகுதி மக்கள் ேகாரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Government school ,Nallampalli ,
× RELATED ஒடுகத்தூர் அருகே பரபரப்பு அரசு...