×

சென்னையில் போலீஸ் தடியடியை கண்டித்து தி.பூண்டியில் ஆர்ப்பாட்டம்: 500 பேர் மீது வழக்கு பதிவு

திருத்துறைப்பூண்டி, பிப். 17: ெசன்னையில் குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதை கண்டித்து திருத்துறைப்பூண்டியில் ஆர்ப்பாட்டம் செய்த 500 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சென்னையில் நடத்திய போலீஸ் தடியடியை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் தெற்கு மாவட்ட தலைவர் முஹம்மது மிஸ்கீன் தலைமையில் திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையம் அருகில் நேற்று முன்தினம் மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட தலைவர் முஹம்மது மிஸ்கீன் மற்றும் 250 பெண்கள் உட்பட 500பேர் மீது திருத்துறைப்பூண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.


Tags : policemen ,Chennai ,
× RELATED திருவாரூர் ஆழித்தேரோட்டத்திற்கு 2000 போலீசார் பாதுகாப்பு