×

விவசாயிக்கு அரிவாள் வெட்டு மர்ம நபர்களுக்கு வலை

தா.பழூர் பிப் 17: ெஜயங்கொண்டம் அருகே விவசாயியை அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள மேலூர் கிராமம் நடுத்தெருவைச் சேர்ந்த ராமசாமி மகன் பட்டுசாமி (54). விவசாயி. இவர் தனது வயலுக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத 3 நபர்கள் பின்பக்கமாக வந்து பட்டுசாமியை அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் பலத்த காயமடைந்த பட்டுசாமியை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இது குறித்து புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் போலீசார் வழக்கு பதிந்து அடையாளம் தெரியாத 3 மர்ம நபர்களை விசாரித்து தேடி வருகின்றனர்.

Tags :
× RELATED பெண்ணை தாக்கி மிரட்டிய இருவர் கைது