×

மின்துறை செயற்பொறியாளர் தகவல் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து எஸ்டிபிஐ கட்சி ஆர்ப்பாட்டம்

நாகை, பிப்.17: குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக நாகை புதிய பஸ்ஸ்டாண்ட் அருகே எஸ்டிபிஐ கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் பைசல்ரகுமான் தலைமை வகித்தார். மாவட்ட துணை தலைவர் அக்பர்அலி, நகர தலைவர் பக்ருதீன், செயலாளர் மொய்தீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குடியுரிமை திருத்த சட்டத்திருத்த கொண்டு வந்து மக்களை பிளவுப்படுத்தும் பாஜ அரசை கண்டிப்பது. குடியுரிமை சட்ட திருத்தம், தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை ரத்து செய்யவேண்டும். இதற்கு எதிராக தமிழக அரசு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் ஆகிய கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதையடுத்து தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக பைசல்ரகுமான், பக்ருதீன், பாபுகான் உள்பட 80 பேர் மீது வெளிப்பாளையம் இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசம் வழக்குப்பதிவு செய்துள்ளார்.

Tags : SDBI Party Protest ,
× RELATED நாகை நகராட்சியை கண்டித்து எஸ்டிபிஐ கட்சி ஆர்ப்பாட்டம்