சீர்காழி,பிப்.17: சீர்காழி அருகே திருவெண்காட்டில் ரூ.35லட்சம் செலவில் கால்நடை மருத்துவமனைக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. சீர்காழி எம்எல்ஏ பாரதி தலைமை வகித்தார். சீர்காழி ஒன்றியக்குழு தலைவர் கமலஜோதி தேவேந்திரன், ஊராட்சி மன்ற தலைவர்கள் சுகந்தி நடராஜன், முல்லைவேந்தன், ஒன்றிய கவுன்சிலர்கள் பஞ்சுகுமார், ஜான்சிராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலாளர் கார்த்திக் வரவேற்றார். எம்எல்ஏ பாரதி கால்நடை மருத்துவமனைக்கு புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார் இதில் பேரூர் கழக செயலாளர், போகர் ரவி, நகர கூட்டுறவு வங்கி துணை தலைவர் ஏவி மணி, பொதுப்பணித்துறை(கட்டம்) உதவி செயற்பொறியாளர் சிங்காரவேல், உதவிபொறியாளர் செல்வி, ஒப்பந்ததரார் இளங்கோவன், ஊராட்சி தலைவர் துரைராஜன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
உயர்நீதி மன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது