×

கரூர் பழைய நீதிமன்ற வளாகத்தில் இலவச சட்ட வழக்கறிஞர்களுக்கு பயிற்சி

கரூர், பிப்.17: இலவச சட்ட வழக்கறிஞர்களுக்கு பயிற்சி வகுப்புகள், மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின்பேரில் கரூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் சார்பில், பழைய நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாற்றுமுறை தீர்வு மையத்தில் நடைபெற்றது.
இந்த வகுப்புகளில், சட்டப்பணிகள் ஆணையச்சட்டம், மோட்டார் வாகனச் சட்டம், போக்சோ சட்டம், சிறார் சட்டம், குழந்தை திருமண தடுப்புச் சட்டம், முத்தோர் மற்றும் பெற்றோர் பராமரிக்கும் சட்டம், குற்றத்தால் பாதிக்கப்பட்டோர் இழப்பீடு சட்டம், சிறைவாசிகளின் உரிமைகள், மரண வாக்குமூலம் பெறுவது, இந்திய சாட்சிய சட்டம், வழக்கு ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்வது பற்றி விளக்கப்பட்டது. பயிற்சியில் வழக்கறிஞர்களின் கேள்விகளுக்கு உரையாடல் முறையில் பதில் அளிக்கப்பட்டது. பயிற்சியை கரூர் மாவட்ட அமர்வுநீதிபதி கிறிஸ்டோபர் துவக்கி வைத்து பேசினார். மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் மோகன்ராம், உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் ரத்தினதாரா, சுதர்சனா, பயிற்சியளித்தனர். கரூர், குளித்தலை நீதிமன்ற வழக்கறிஞர்கள் 70பேர் கலந்து கொண்டனர்.

Tags : attorneys ,court premises ,Karur ,
× RELATED அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற...