×

தஞ்சை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

தஞ்சை, பிப்.17: தஞ்சை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 21ம் தேதி நடைபெற உள்ளது.மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் வரும் 21ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெற உள்ள கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் தலைமை வகிக்க உள்ளார். கூட்டத்தில் புதிய தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு திட்ட விளக்கம் அளிக்கப்பட உள்ளது.

மேலும் கூட்டத்தில் கலந்து கொள்ளும் விவசாயிகள், முன்னோடி விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் அனைவரும் நீர்பாசனம், கால்நடை, கூட்டுறவு, மின்சாரம், வேளாண்மை பொறியியல் துறை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், தோட்டக்கலைத்துறை போன்ற விவசாயம் சார்ந்த கருத்துக்களை மட்டும் தெரிவித்து பயன்பெறலாம். இக்கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துக்களை தெரிவிக்க விரும்பும் விவசாயிகள் அன்றைய தினம் காலை 9 மணி முதல் 10 மணி வரை தங்கள் ஊர், பெயர் வட்டாரத்தை குறிப்பிட்டு கணினியில் பதிவு செய்து கொள்ள வேண்டும் என மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் கேட்டுக் கொண்டுள்ளார்.


Tags : Grievance Day Meeting ,Thanjavur District Farmers ,
× RELATED பெரம்பலூரில் மக்கள் குறைதீர்...