×

காவலர் குடியிருப்பில் சிறுவர் விளையாட்டு பூங்கா

கடலூர், பிப். 17:  கடலூரில் காவலர் குடியிருப்பில், சிறுவர்களுக்கான விளையாட்டு பூங்காவை டிஐஜி சந்தோஷ்குமார் திறந்து வைத்து பார்வையிட்டார்கடலூர் காவல் கண்காணிப்பாளர்  அபிநவ் தலைமையில் சமீபத்தில் ஆயுதப்படை காவலர் குடும்பத்தினரின் பொதுநலன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற காவலர்கள் சார்பாக ஆயுதப்படை காவலர் குடியிருப்பு பகுதியில் சிறுவர் பூங்கா அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

அதன் பேரில் காவல் கண்காணிப்பாளர் முயற்சியால் சன்மார் குழுமம் சார்பில் ரூ.5 லட்சம் மதிப்பில் காவலர் சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டது. இதை தொடர்ந்து ஆயுதப்படை காவலர் சிறுவர் பூங்காவை விழுப்புரம் சரக துணை தலைவர் சந்தோஷ்குமார் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் எஸ்பி அபிநவ், சன்மார் குழுமம் சார்பில் பழனிசாமி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாண்டியன், ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளர் சரவணன், தனிப்பிரிவு ஆய்வாளர் (பொறுப்பு) பால்சுதர், ஆயுதப்படை ஆய்வாளர், மற்றும் காவலர்களின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்

Tags : Children's Park ,Guard Apartments ,
× RELATED கோடைவிடுமுறையை கொண்டாட கலெக்டர்...