×

வம்பன் வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தில் உலக பயறு தினம் கொண்டாட்டம்

புதுக்கோட்டை, பிப். 13: திருவரங்குளத்தில் உள்ள வம்பன் வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகததில் நடந்த உலக பயறு தினம் கொண்டாட்டத்தில் விவசாயிகளுக்கு சிறப்பு கையேடு வழங்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஒன்றியத்தில் உள்ள வம்பன் வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலக கூட்டமன்றத்தில் உலக பயறு தினம் 2020 கொண்டாடபட்டது. வேளாண்மை உதவி இயக்குனர் ரங்கசாமி வரவேற்றார். தேசிய உணவு பாதுகாப்பு திட்ட ஆலோசகர் திருப்பதி தலைமை வகித்து பேசினார். அப்போது பயறு தேவை உற்பத்தி, பயறு உற்பத்தி தொழில்நுட்பங்கள், தேசிய உணவு பாதுகாப்பு திட்ட இனங்களை குறித்து விளக்கி கூறினார். மேலும் கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகளுக்கு பயறு தொழில்நுட்ப கையேட்டை வழங்கினார்.

பயறு சாகுபடி நுட்பங்கள் குறித்து வேளாண்மை உதவி இயக்குனர் ரங்கசாமி, விதை உற்பத்தி நுட்பங்கள் குறித்து வேளாண்மை அலுவலர் பாண்டி ஆகியோர் விளக்கி பேசினர். கூட்டரங்கில் கருத்து காட்சி அமைக்கப்பட்டு விதை நேர்த்தி, உரமிடல், செயல்விளக்கங்கள் செய்து காண்பி–்க்கப்பட்டது. கூட்டத்தில் வம்பன், ஆலங்குடி, தட்சிணாபுரம், திருவரங்குளம், மைக்கேல்பட்டி ஆகிய கிராமத்தை சேர்ந்த 50 விவசாயிகள் கலந்து கொண்டனர்.  ஏற்பாடுகளை திருவரங்குளம் வட்டார கள பணியாளர்கள் செய்திருந்தனர்.

Tags : Wampan ,World Food Day Celebration ,Office ,Assistant Director ,
× RELATED வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே...