×

ரூ.38 ஆயிரம் அபராதம் கறம்பக்குடி அருகே அனுமதியின்றி மது விற்றவர் கைது

கறம்பக்குடி, பிப். 13: கறம்பக்குடியில் பதுக்கி வைத்து மதுபாட்டில்கள் விற்பனை செய்தவர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 50 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கறம்பக்குடி சீனிக்கடை முக்கம் மீன் மார்க்கெட் அருகே மதுபாட்டில் விற்பனை செய்வதாக கறம்பக்குடி போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து சீனிக்கடை முக்கம் மீன் மார்க்கெட் பகுதியில் கறம்பக்குடி எஸ்ஐ அன்பழகன் சோதனை நடத்தினார். அப்போது அங்கு பதுக்கி வைத்து மதுபாட்டில்களை கருப்பையா (36) என்பவர் விற்பனை செய்தது தெரியந்தது. இதையடுத்து கருப்பையாவை கைது செய்ததுடன் அவரிடமிருந்து 50 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags : Karambakkudy ,
× RELATED கறம்பக்குடி பகுதியில் இன்று மின்நிறுத்தம்