×

பொதுமக்கள் அச்சம் ஆலத்தூர் பகுதி முன்னேற்றத்துக்காக ஒற்றுமையுடன் பாடுபட வேண்டும்

பாடாலூர், பிப். 13: ஆலத்தூர் பகுதியின் முன்னேற்றத்துக்காக அனைவரும் ஒற்றுமையுடன் பாடுபட வேண்டும் என ஒன்றியக்குழு உறுப்பினர்களின் முதல் கூட்டத்தில் தலைவர் கிருஷ்ணமூர்த்தி பேசினார். ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்களின் முதல் கூட்டம் ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் நேற்று நடந்தது. ஒன்றியக்குழு தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்து பேசும்போது, ஆலத்தூர் ஒன்றியத்தில் உள்ள பல்வேறு பகுதியில் இருந்தும் நாம் உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளோம். ஆலத்தூர் ஊராட்சிஒன்றிய பகுதியின் முன்னேற்றத்துக்காக கட்சி பாகுபாடின்றி அனைவரும் ஒற்றுமையுடன் பாடுபட வேண்டும். ஊர் கூடி தேர் இழுப்பதுபோல் அனைவரும் செயலாற்ற வேண்டும். அதேபோல் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் தாங்கள் தேர்ந்தெடுக்க பகுதிகளில் கட்சி பாகுபாடின்றி அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில் பணிகளை செய்ய வேண்டும். அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட்டு ஒன்றியத்துக்கு பெருமை சேர்க்க வேண்டும். ஒவ்வொரு ஒன்றியக்குழு உறுப்பினருக்கும் தலா ரூ.2 லட்சத்துக்கான பணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதற்கான பணிகளை விரைவாக தேர்வு செய்து வழங்க வேண்டும் என்றார். ஒன்றியக்குழு துணைத் தலைவர் சுசீலா முன்னிலை வகித்தார். மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள் மதியழகன், அருள்செல்வி மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆலயமணி, லட்சுமி மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : public ,area ,Alathur ,
× RELATED வாக்குப்பதிவு நடைபெறும் இன்று வெப்ப...