களக்காடு, பிப்.13: களக்காடு சப்-இன்ஸ்பெக்டர் பழனி மற்றும் போலீசார் வடுவூர்பட்டி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது பிராஞ்சேரியை சேர்ந்த இசக்கிமுத்து (54) அங்குள்ள மதுபான கடை அருகே சாக்கு பையுடன் நின்று கொண்டிருந்தார்.
அவரை சோதனை செய்த போது சாக்கு பையில் அதிக விலைக்கு சட்ட விரோதமாக விற்பனை செய்வதற்காக 3 மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 3 மதுபாட்டில்கள், ரூ 120 பறிமுதல் செய்யப்பட்டது.