திருவாரூர், பிப். 13: திருவாரூரில் உரிய அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் 15 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 14வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையினை விரைவில் துவங்க வேண்டும், அகவிலைப்படி நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் நேற்று முன்தினம் அரசு போக்குவரத்துக்கழக பணிமனை முன்பாக சிஐடியு மற்றும் ஏஐடியுசி உட்படஅனைத்து தொழிற்சங்கத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு போலீசார் உரிய அனுமதி வழங்காத பட்சத்தில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடைபெற்ற நிலையில் போக்குவரத்திற்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தியதாக கூறி திருவாரூர் டவுன் போலீசார் மேற்படி தொழிற்சங்கத்தினர் மோகன் (46), வைத்தியநாதன் (40) முருகையன் (40 )செங்குட்டுவன் (50 )மதியழகன் (46 )உட்பட 15 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.