×

பாபநாசம் அருகே கரும்பு வயல் தீயில் எரிந்து சேதம்

பாபநாசம், பிப்.13: பாபநாசம் அருகே மின்கம்பியில் இருந்து தீப்பொறி விழுந்து கரும்பு வயல் சேதமானது. பாபநாசம் அடுத்த வடசருக்கை மெயின் சாலையில் செல்வம், ராஜேந்திரன், பாலகிருஷ்ணன், மோகன்தாஸ், சிற்றரசு, ரமேஷ், அய்யாராசு, வேல்முருகன், மதி, கார்த்தி உள்ளிட்ட பத்து பேரின் வயல்கள் உள்ளது. இதில் கரும்பு பயரிட்டிருந்தனர். கரும்புகள் விளைந்து அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் கடந்த 10ம்தேதி வயல் வழியாக செல்லும் மினகம்பியிலிருந்து விழுந்த தீப்பொறி பட்டு செல்வத்தின் வயல் தீப்பற்றியது. தொடர்ந்து அடுத்தடுத்த வயல்களுக்கு தீ பரவியது. இதில் பதினைந்து ஏக்கரில் விளைந்திருந்த கரும்பு எரிந்து நாசமானது. அங்கிருந்த விவசாயிகள் மற்றும் கிராமமக்கள் உடனடியாக தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனால் 35 ஏக்கர் கரும்பு கொல்லை, நடவு வயல் தப்பியது. தகவலறிந்த பாபநாசம் தீயணைப்பு நிலைய வீரர்கள் சென்று தீயை அணைத்தனர். தீயில் எரிந்து சேதனை கரும்பு வயலை திமுக மாவட்ட செயலர் கல்யாணசுந்தரம், ஒன்றிய செயலர் தாமரைச் செல்வன், ஒன்றியக்குழு தலைவர் சுமதி உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.

Tags : cane field fire ,Babanasam ,
× RELATED அமெரிக்காவில் வேலை என கூறி வாலிபரிடம் ரூ.7.93 லட்சம் மோசடி