×

செய்யாறு அருகே துணிகரம் ஐம்பொன் அம்மன் சிலை திருட்டுமர்ம நபர்களுக்கு வலை

செய்யாறு, பிப்.12: செய்யாறு அருகே விநாயகர் கோயிலில் இருந்த ஐம்பொன் அம்மன் சிலையை திருடி சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடிவருகின்றனர்.திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த வெம்பாக்கம் தாலுகா, கனிகிலுப்பை கிராமத்தில் விநாயகர் கோயில் உள்ளது. இக்கோயிலை அதே பகுதியை சேர்ந்த பரமேஸ்வரன் என்பவர் பராமரித்து வருகிறார். இந்நிலையில், பரமேஸ்வரன் நேற்று முன்தினம் பூஜைகள் முடிந்ததும் இரவு 8 மணியளவில் கோயிலை பூட்டிவிட்டு சென்றார்.தொடர்ந்து, நேற்று காலை வழக்கம்போல் கோயிலுக்கு வந்தார். அப்போது, கோயில் வளாகத்தில் இருந்த ஒன்றே முக்கால் அடி உயரம், 25 கிலோ எடையுள்ள ஐம்பொன் மாரியம்மன் சிலை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த தூசி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், கோயிலை காலை 6 மணிக்கு திறந்து பூஜைகள் செய்ததும், நாள் முழுவதும் கோயில் திறந்தே இருக்குமாம். இரவு 8 மணிக்கு தான் நடையை சாத்துவது வழக்கமாம். இந்நிலையில், நேற்றைய முன்தினம் கோயில் திறந்து கிடப்பதை அறிந்த மர்ம நபர்கள், அங்கிருந்த ஐம்பொன் அம்மன் சாலை திருடிச் சென்றதும், இதையறியாமல் பரமேஸ்வரன் கோயிலை பூட்டிச்சென்றதும் தெரியவந்தது. திருட்டு போன அம்மன் சிலையின் மதிப்பு ₹60 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது.இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து கோயிலில் கைவரிசை காட்டிய மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.

Tags : Cheyyaru ,
× RELATED வந்தவாசி- செய்யாறு- வேலூர்...