×

தமிழகத்தில் இன்று புதிதாக பணியில் சேரும் 1,800 முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு அடுத்த 20 நாட்களுக்கு விடுமுறை இல்லை

வேலூர், பிப்.12: தமிழகத்தில் 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கியுள்ள நிலையில், புதிதாக பணியில் சேரும் 1,800 முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு அடுத்த 20 நாட்களுக்கு விடுமுறை இல்லை என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழக அரசு பள்ளிகளில் 10, 11, 12ம் வகுப்புகளுக்கான ஆசிரியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதாக புகார் எழுந்தது. எனவே, அரசு பள்ளிகளில் காலிப்பணியிடங்கள் நிரப்ப வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. அதன்படி, ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் கடந்த ஆண்டு முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்துக்கான தேர்வுகள் நடத்தப்பட்டது.இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு எந்தவித நேர்முகத் ேதர்வும் இல்லாமல், கலந்தாய்வு மூலமாக பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டது. இதைத்ெதாடர்ந்து புதிதாக பணிநியமனம் பெற்ற 1,800 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் இன்று (புதன்) அந்தந்த பள்ளிகளில் பணியில் இணைகின்றனர். இந்நிலையில், பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு இன்னும் 20 நாட்கள் மட்டுமே இருக்கிறது.

தொடர்ந்து 10, 11ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகளும் நடக்க உள்ளது. மாணவர்களை தேர்வுக்கு தயார் செய்யும் விதமாக, புதிதாக பணியில் சேர்ந்துள்ள 1,800 பட்டதாரி ஆசிரியர்களுக்கு அடுத்த 20 நாட்களுக்கு விடுமுறை எடுக்க அனுமதி இல்லை, பள்ளிக்கு குறிப்பிட்ட நேரத்துக்கு வர வேண்டும் என்பது உள்ளிட்ட உத்தரவுகள் பள்ளிக் கல்வி இயக்குனரகம் சார்பில் பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: பொதுத்தேர்வுகள் தொடங்கவுள்ள நிலையில், மாணவர்களை தயார்படுத்த வேண்டியது ஆசிரியர்களின் கடமை. இந்நிலையில், புதிதாக பணியில் இணைந்துள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு பள்ளியின் சூழ்நிலைகள் குறித்து தெரியாது. எனவே, மாணவர்களை பொதுத்தேர்வுக்கு தயார்படுத்துவதில் கூடுதல் பணி அவசியமாகிறது.

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் அடுத்த 5 ஆண்டுகளில் முக்கிய பதவிகளில், வேலைகளில் இருக்க வேண்டும். அதற்காக, ஆசிரியர்களின் நடவடிக்கைகள் முன்மாதிரியாக இருக்க வேண்டும். புதிதாக பணியில் சேரும் ஆசிரியர்களுக்கு அடுத்த 2 ஆண்டுகளுக்கு மாதம் ஒருமுறை மட்டுமே விடுமுறை எடுக்க அனுமதி இருக்கிறது.இந்த நிலையில், அடுத்த 20 நாட்களில் பொதுத்தேர்வு நெருங்குவதால் புதிதாக சேர்ந்துள்ள ஆசிரியர்கள் (சனி, ஞாயிறு தவிர்த்து) இன்று முதல் 20 நாட்களுக்கு விடுமுறை எடுக்க அனுமதிக்க வேண்டாம் என்று தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.முக்கியமான பாடங்களை சுருக்கமாக மீண்டும் ஒருமுறை நடத்த முயற்சிக்க வேண்டும். குறிப்பிட்ட நேரத்துக்கு ஆசிரியர்கள் பள்ளிக்கு வருவதை தலைமை ஆசிரியர்கள் கண்காணித்து அறிக்கை அளிக்க வேண்டும். இதன் அடிப்படையில், தாமதமாக பள்ளிக்கு வரும் ஆசிரியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்ைக எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Tags : teachers ,vacation ,Tamil Nadu ,
× RELATED தொலை தூரத்தில் தேர்தல் பணி ஆசிரியர் கூட்டணி எதிர்ப்பு