×

குளத்தூர் அருகே முள்ளூரில் சிதிலமடைந்த பயணிகள் நிழற்குடை சீரமைக்கப்படுமா?

குளத்தூர், பிப். 12: முள்ளூரில் சிதிலமடைந்த பயணிகள் நிழற்குடையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குளத்தூர் அருகே உள்ள முள்ளூரில், கிராம மக்களின் வசதிக்காக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டது. தொடர்ந்து முறையான பராமரிப்பு இல்லாததால் இந்த பயணிகள் நிழற்குடை சிதிலமடைந்து பயனற்று காட்சியளிக்கிறது. இதனால் முள்ளூரில் இருந்து தூத்துக்குடி, விளாத்திகுளம் செல்லும் மக்கள், பஸ்சுக்காக சாலையிலேயே காத்திருக்க வேண்டிய அவலம் உள்ளது. எனவே பயணிகள் நிழற்குடையை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


Tags : Mullur ,Klathoor ,
× RELATED புதுக்கோட்டை மாநகராட்சியுடன்...