×

திருமங்கலம் அருகே 25 ஏக்கர் நிலத்தில் தீ: கருகியது அ(து)வரை விவசாயிகள் வேதனை

திருமங்கலம், பிப்..12: திருமங்கலம் அருகே மக்காச்சோள சக்கைகளை கொளுத்திய போது பரவிய தீயால் 25 ஏக்கர் பரப்பளவில் இருந்த அவரை, துவரை செடிகள் எரிந்து நாசமானது. திருமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளான மதிப்பனூர், சித்திரெட்டிபட்டி மேட்டுபட்டி, பொட்டிபுரம், நாகையாபுரம், சவுடார்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் அதிகளவில் மக்காசோளம் பயிரிட்டுள்ளனர். மானாவாரி விவசாயமான மக்காசோளத்தை கடந்த சில வாரங்களாக விவசாயிகள் அறுவடை செய்துவருகின்றனர். இந்தநிலையில் பொட்டிபுரம் கிராமத்தில் ரஞ்சிதம் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் அறுவடை முடித்துள்ள நிலையில் வீணான மக்காசோள சக்கைகளை கும்பலாக போட்டு அந்த பகுதியிலுள்ள சிலர் நேற்று முன்தினம் இரவு கொளுத்தியுள்ளனர். காற்றின் வேகத்தினால் சுமார் 25 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த அவரை, துவரை உள்ளிட்ட செடிகள் தீயில் எரிந்து நாசமாகின. இதனால் அதிர்ச்சியடைந்த விவசாயிகள் இது குறித்து திருமங்கலம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். நிலைய அதிகாரி ஜெயராணி தலைமையிலான தீயணைப்பு படையினர் இரவில் சென்று சுமார் 2 மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். 25 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் தீயில் கருகியது இந்த பகுதி விவசாயிகளிடம் வேதனையை உண்டாக்கியுள்ளது.

Tags : land ,Thirumangalam ,
× RELATED தமிழ்நாட்டில் தயாராகிறது ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்..!!