×

20 பவுன் நகை கொள்ளை

வத்தலக்குண்டு, பிப். 12: வத்தலக்குண்டுவில் வீட்டை உடைத்து 20 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.வத்தலக்குண்டு திருநகரை சேர்ந்தவர் புஷ்பராணி. இவரது கணவர் பிரான்சிஸ்சேவியர். ராணுவ வீரராக இருந்த இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுக்கு ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர். மகன் ராணுவத்தில் பணிபுரிகிறார். ஒரு மகள் வத்தலக்குண்டுவிலும், இன்னொரு மகள் கோவையிலும் திருமணம் செய்து கொடுக்கப்பட்டு வசித்து வருகின்றனர்.புஷ்பராணி மட்டும் வீட்டில் தனியாக இருந்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர் கோவையில் உள்ள மகள் வீட்டிற்கு சென்றார். இதை நோட்டமிட்ட மர்மநபர்கள் வீட்டின் பின்புற காம்பவுண்ட் சுவரில் ஏறி குதித்து, பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். தொடர்ந்து பீரோவில் இருந்த 20 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்று விட்டனர். நேற்று காலை பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் புஷ்பராணியின் வீடு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து அவர்கள் உடனே புஷ்பராணி மற்றும் வத்தலக்குண்டு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பிச்சைபாண்டியன் தலைமையிலான போலீசார் வந்து விசாரணை நடத்தினர். புஷ்பராணியிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தும், விட்டு சென்ற ஆக்சா பிளேடு, சுத்தியல் போன்றவற்றை வைத்தும் மர்மநபர்களை தேடி வருகின்றனர்.பூட்டிய வீட்டை உடைத்து 20 பவுன் நகை கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
× RELATED விவசாயிகளுக்கு பயிற்சி