மணப்பாறை, பிப்.12: மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு விராலிமலை பகுதியில் நடந்த விபத்து ஒன்றில் பலியான பொன்ராஜ் மகன் சதீஷ்குமார்(26) என்பவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக கொண்டு வரப்பட்டது. பலியான சதீஷ்குமார் அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்ததாக முதல் தகவல் அறிக்கையில் விராலிமலை போலீசார் குறிப்பிட்டுள்ளது தவறு என்றும், சதீஷ்குமார் மீது மோதிய வாகனத்தையும், வாகனத்தை இயக்கியவரையும் முதல் தகவல் அறிக்கையில் விராலிமலை போலீசார் பதிவு செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி,
சதீஷ்குமாரின் உறவினர்கள் திடீர் என அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த மணப்பாறை இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் போலீசாருடன் சென்று போலீசார் நடவடிக்கை எடுப்பார்கள் என்று கூறியதை அடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.