×

சேலம் புதிய பஸ் ஸ்டாண்டில் கண்டக்டரிடம் செல்போன் பறித்த விழுப்புரம் வாலிபர் சிக்கினார்

சேலம், பிப்.12: சேலம் புதிய பஸ் ஸ்டாண்டில் கண்டக்டரிடம் செல்போன் பறித்த விழுப்புரம் வாலிபரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் (34), அரசு பஸ் கண்டக்டர். இவர் நேற்றிரவு சேலம் புதிய பஸ் ஸ்டாண்டில் சேலம்-திருப்பதி அல்ட்ரா டீலக்ஸ் பஸ்சில் பயணிகளை ஏற்றிக் கொண்டிருந்தார். அப்போது அவர் அருகே வந்த ஒரு வாலிபர், திடீரென செந்தில்குமார் கையில் வைத்திருந்த செல்போனை பறித்துக் கொண்டு தப்பியோடினார். கண்டக்டர் செந்தில்குமார் கூச்சலிடவும், அங்கிருந்த பயணிகள் அந்த வாலிபரை விரட்டிச் சென்று மடக்கி பிடித்தனர். பின்னர் பள்ளப்பட்டி போலீசில் ஒப்படைத்தனர். போலீசாரின் விசாரணையில் அவர், விழுப்புரம் மாவட்டம் கிடாரிப்பட்டியை சேர்ந்த ஏழுமலை மகன் சதீஸ் (25) என்பது தெரியவந்தது. அவரிடம் இருந்து போலீசார் செல்போனை மீட்டு, தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Viluppuram ,
× RELATED கரும்பு விவசாயத்திற்கு பெயர்போன...