×

சேலம் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே ஓடும் பஸ்சில் செல்போன் திருடிய வாலிபர் கைது

சேலம், பிப்.12: சேலம் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே ஓடும் பஸ்சில் செல்போன் திருடிய வாலிபருக்கு பயணிகள் தர்மஅடி கொடுத்து, போலீசில் ஒப்படைத்தனர். சேலம் நரசோதிப்பட்டி இந்திராணிநகரை சேர்ந்தவர் அன்சர்அலி (33). தனியார் இன்ஸ்சூரன்ஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று, சூரமங்கலத்தில் இருந்து புதிய பஸ் ஸ்டாண்டிற்கு டவுன் பஸ்சில் வந்தார். புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே பஸ் வந்தபோது, அவருக்கு பின்னால் நின்ற ஒரு வாலிபர், நைசாக அன்சர்அலியின் பாக்கெட்டில் இருந்து செல்போனை திருடினார்.

இதனை பார்த்த அவர், அந்த வாலிபரை கையும் களவுமாக பிடித்தார். அப்போது, அந்த வாலிபர் பஸ்சில் இருந்து குதித்து தப்பியோட முயன்றார். ஆனால், சக பயணிகள் உதவியுடன் மடக்கி பிடித்து, தர்மஅடி கொடுத்தனர். பின்னர் அவரை, பள்ளப்பட்டி போலீசில் ஒப்படைத்தனர். எஸ்ஐ கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தியதில் அவர், கிச்சிப்பாளையம் சுந்தர்தெருவை சேர்ந்த பக்ரூதின் (எ) பாபு (35) என்பது தெரியவந்தது. அவரை கைது செய்து, திருடிய செல்போனை போலீசார் மீட்டனர். தொடர்ந்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags : Salem New Bus Stand ,
× RELATED தீ பிடித்து கடைக்காரர் சாவு