×

ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை உடனே துவங்ககோரி அனைத்து போக்குவரத்து தொழிற்சங்கம் ஆர்ப்பாட்டம்

திருவாரூர், பிப். 12: 14 வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையினை உடனடியாக துவங்க கோரி திருவாரூரில் நேற்று போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 14வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையினை உடனடியாக துவங்க வேண்டும். 240 நாட்கள் பணி முடித்த அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அகவிலைப்படி நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். பேருந்துகளின் எண்ணிக்கையை குறைக்கக்கூடாது. ஓய்வூதியர்களின் பணப்பலன்களை உடனடியாக வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் நேற்று அரசு போக்குவரத்துக்கழக பணிமனை முன் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கிளை தலைவர் முருகன் தலைமையிலும், பொதுச்செயலாளர் மணிமாறன் முன்னிலையிலும் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பொறுப்பாளர்கள் கோவிந்தராஜ், வைத்தியநாதன், மனோகரன், துரை, முருகேசன், சந்திரசேகரன், கண்ணன் மற்றும் சி.ஐ.டி.யு மாவட்ட செயலாளர் முருகையன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Wage contract negotiations ,transport unions ,
× RELATED போக்குவரத்து தொழிற்சங்கத்தினர்...