×

மன்னார்குடி சவளக்காரனில் குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு: கம்யூ. கையெழுத்து இயக்கம்

மன்னார்குடி, பிப். 12: குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சவளக்காரனில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் அரசியல் கட்சிகள், அமைப்புகள், கல்லூரி மாணவர்கள் தொ டர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் திமுக உள்ளி ட்ட அதன் கூட்டணி கட்சிகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வரு கின்றனர். அதன் ஒரு பகுதியாக குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப்பெற வலி யுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மன்னார்குடி அருகே சவளக் காரன் ஊராட்சியில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு சிபிஐ மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் வை. செல்வராஜ் தலைமை வகித்து முதல் கையெழுத்திட்டு இயக்கத்தை துவக்கி வைத்து பேசினார். குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிரான கையெழுத்து இயக்கத்தின் நோக் கங்கள் குறித்தும் , மத்திய பாஜக அரசின் அரசியல் சட்டத்திற்கு எதிரான மதவாத உள்நோக்கம் கொண்ட வெறுப்பு அரசியலை கண்டித்தும் மன்னை ஒன்றிய செயலாளர் வீரமணி, ஒன்றியக்குழு துணை தலைவர் வனிதா, மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர்கள் துரை அருள்ராஜன், மாரியப்பன், இளைஞர் மன்ற ஒன்றிய செயலாளர் பாப்பையன், ஒன்றியக் குழு உறுப்பினர் பூபதி ஆகியோர் பேசினர்.

Tags :
× RELATED ஆதிச்சமங்களம் ஊராட்சியில் புதிய மின்மாற்றி அமைப்பு