×

கல்வித்துறை ஊழியர்கள் 9 பேருக்கு பதவி உயர்வு

நாமக்கல், பிப்.12:  நாமக்கல் மாவட்டத்தில் கல்வித்துறை ஊழியர்கள் 9 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசு பள்ளிகளில், துப்புரவு பணியாளராக பணியாற்றி வந்த உமாசந்திரா, அன்புமணி, பழனிச்சாமி, அந்தோணி குரூஸ், மணிகண்டன், அறிவழகன், மனோஜ், கோவிந்தன் மற்றும் ராணி ஆகிய 9 பேர், பதிவறை எழுத்தராக பதவி உயர்வு பெற்றுள்ளனர். இவர்கள் பணியில் சேர்ந்ததன் முன்னுரிமை அடிப்படையில், இந்த பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. வெவ்வேறு அரசு பள்ளிகளில் இவர்களுக்கு பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை மாவட்ட கல்வி அலுவலர் உதயக்குமார் வழங்கினார். அப்போது, நேர்முக உதவியாளர் முருகேசன், துணை ஆய்வாளர் பெரியசாமி மற்றும் கண்காணிப்பாளர் கலையரசன் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags :
× RELATED சந்தைக்குள் புகுந்து மின் ஒயர்கள் திருட்டு