×

திருச்செங்கோட்டில் வேலைவாய்ப்பு முகாம் 18ம் தேதி நடக்கிறது

நாமக்கல், பிப்.12:  திருச்செங்கோட்டில் வரும் 18ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. இதுகுறித்து கலெக்டர் மெகராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நாமக்கல் மாவட்டத்தில், 8ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை படித்து வேலையற்ற 18 வயது முதல் 35 வயதிற்குள்பட்ட ஆண்- பெண் இருபாலருக்கும் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் மூலம் வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில், சிறப்பு வேலைவாய்ப்பு முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, வரும் 18ம் தேதி(செவ்வாய்க்கிழமை) திருச்செங்கோடு வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 22ம் தேதி பள்ளிபாளையம் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் நடைபெற உள்ளது. வட்டார அளவிலான வேலைவாய்ப்பு முகாமில், திருச்செங்கோடு மற்றும் பள்ளிபாளையத்தைச் சேர்ந்தவர்கள் கலந்து கொள்ளலாம். ஆதார் அட்டை, குடும்ப அட்டை, கல்விச் சான்றிதழ்கள் ஆகியவற்றின் நகல்களுடன் பங்கேற்கலாம். மேலும், விபரங்களுக்கு 04286 -281131 என்ற எண்ணில் தகவல் தெரிவிக்கலாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Tags : employment camp ,Tiruchengode ,
× RELATED நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னேற்பாடுகள் தீவிரம்