×

திருச்செங்கோடு அருகே பழுதடைந்த சாலையை சீரமைக்க கோரிக்கை

திருச்செங்கோடு, பிப்.12: திருச்செங்கோடு அருகே எளையாம்பாளையத்தில் குண்டும், குழியுமான  சாலையை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருச்செங்கோடு தாலுகா, எலச்சிப்பாளையம் ஒன்றியம் எளையாம்பாளையம் காலனி பகுதியிலிருந்து இலுப்புலி செல்லும் சாலையில், தினசரி ஏராளமான வாகனங்கள் இயக்கப்படுகின்றன. டூவீலர்கள்,  கார்கள் மற்றும் லாரிகள்  அதிகளவில் சென்று வருகின்றன. மேலும், விவசாயத் தொழிலாளர்கள், மாணவ- மாணவிகள் அதிகளவு இந்த சாலையை பயன்படுத்துகின்றனர். ஆனால், இந்த சாலை குண்டும் -குழியுமாக  உள்ளது. இதனால், டூவீலர்களில் செல்வோர் கீழே விழுந்து காயமடையும் பரிதாபத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்த நிலை கடந்த பல வருடங்களாக உள்ளது. எனவே, இந்த  சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : road ,Tiruchengode ,
× RELATED லாரி-சரக்கு ஆட்டோ மோதி டிரைவர் பலி