×

சூரக்கோட்டையில் பதுங்கியிருந்த 5 கூலிப்படையினர் ஆயுதங்களுடன் கைது

தஞ்சை,பிப்.12: தஞ்சை அருகே சூரக்கோட்டையில் பதுங்கியிருந்த 5கூலிப்படையினரை ஆயுதங்களுடன் போலீசார் கைது செய்தனர்.
தஞ்சை அருகே சூரக்கோட்டையை சேர்ந்தவர் ராஜா. இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்நிலையில் அவரது வீட்டில் கூலிப்படையினர் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து டிஐஜி லோகநாதன் உத்தரவின்பேரில், எஸ்.பி.மகேஸ்வரன் மேற்பார்வையில் தனிப்படை எஸ்ஐ கண்ணன், எஸ்எஸ்ஐ பிரகாசம் மற்றும் போலீசார் சூரக்கோட்டையில் ராஜா வீட்டில் பதுங்கியிருந்த திருநேல்வேலியை சேர்ந்த இசக்கி, திருச்சியை சேர்ந்த கார்த்தி, திண்டுக்கலை சேர்ந்த ராஜபாண்டி,

அரியலூரை சேர்ந்த விக்னேஷ், தஞ்சை அம்மன்பேட்டையை சேர்ந்த சாமிநாதன் ஆகிய 5 கூலிப்படையினரை கைது செய்து அவர்கள் வைத்திருந்த வீச்சருவாள் மற்றும் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். மேலும் இவர்கள் எதற்காக இங்கு வந்து தங்கியுள்ளனர்? யாரையாவது கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் தங்கியிருந்தனரா? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags : mercenaries ,
× RELATED பொன்னேரியில் கள்ளக்காதலன் கொலை வழக்கில் கூலிப்படையை சேர்ந்த 3 பேர் கைது