×

மாநில அளவில் நடைபெற்ற துப்பாக்கி சுடும் போட்டியில் வெள்ளி பதக்கம் பெற்று மாணவி சாதனை

தஞ்சை, பிப்.12: தஞ்சாவூர் கீழவாசல் சுண்ணாம்புத்தூர் தெருவில் வசிப்பவர் எம்.பாலசுந்தரம் இவரது மகள் வித்தியசியமளா. வயது (16) தஞ்சையில் தூய இருதய மகளிர் மேல்நிலைப்பள்ளியில் படித்து வருகிறார். இவருக்கு துப்பாக்கி சுடும் போட்டியில் மிகவும் ஆர்வம் பல இடங்களில் நடைப்பெற்ற துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்று இருக்கிறார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தஞ்சை கமலா சுப்பிரமணியம் மேல்நிலைப்பள்ளியில் மாநில அளவில் துப்பாக்கி சுடும் போட்டி நடைபெற்றது.

இதில் பல மாவட்டங்களிலிருந்து 100க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். இதில் வித்தியசியமளா இரண்டாம் இடத்தை பெற்றார்.வெற்றி பெற்ற இவருக்கு வெள்ளி பதக்கமும், கோப்பையும், சான்றிதழும் வழங்கி பாராட்டினா். இதனை பள்ளி தலைமை ஆசிரியை, ஆசிரியைகள் வெகுவாக பாராட்டி இனிப்பு வழங்கினர்.

Tags : State Level Shooter Competition ,
× RELATED கலெக்டர் அறிவிப்பு தஞ்சாவூர் மாவட்டத்தில் மீன்பிடி தடைக்காலம் துவக்கம்