×

திருவையாறு அருகே கண்டியூரில் 2 இடங்களில் குழாய் உடைப்பால் சாலையில் வீணாகும் குடிநீர்

திருவையாறு,பிப்.12: திருவையாறு அருகே கண்டியூரில் 2 இடங்களில் குழாய் உடைப்பால் சாலையில் குடிநீர் வீணாகி செல்கிறது. தஞ்சை மாநகராட்சிக்கு விளாங்குடி கொள்ளிடம் ஆற்றிலிருந்து குடிநீர்குழாய் மூலம் எடுத்து செல்லப்பட்டு மாநகராட்சி மக்களுக்கு வழங்கப்பட்டுவருகிறது. இந்த குடிநீர்குழாய் கண்டியூர் பஸ்ஸ்டாப் மெயின்ரோட்டிலும், பெருமாள் கோயில் அருகே உள்ள அரசுப்பள்ளி முன்பும் குழாய் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி செல்கிறது. சாலையில் ஓடும் தண்ணீரில் கால்நடைகள் படுத்துக்கொண்டு தண்ணீர் குடிக்கின்றது. அந்த இடம் குட்டைபோல் காணப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் சாலையில் செல்லும் பொதுமக்கள் தண்ணீர்உடைப்பு எடுத்த குழாயில் கைகால் முகம் கழுவுகிறார்கள்.

தண்ணீர் நின்ற உடன் தேங்கி நிற்கும் தண்ணீர்குழாய் வழியாக உள்ளே செல்கிறது. இதனால் மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.
கண்டியூர்மெயின்ரோட்டில் ஓடும் தண்ணீர் சுண்ணாம்புகார தெருவழியாக செல்வதால் தெருமுழுவதும் சேறும் சகதியுமாக உள்ளதால் தெருவில் பள்ளி செல்லும் குழந்தைகள், பொதுமக்கள் நடந்து செல்வதற்கு மிகவும் சிரமபடுகின்றனர். உடனே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குழாய் உடைப்பை சரி செய்ய வேண்டும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : road ,Kandiyur ,places ,Thiruvaiyar ,
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி