×

திருக்கட்டளை பகுதியில் தண்ணீர் தேவை குறித்து ஊராட்சி தலைவர் ஆய்வு

புதுக்கோட்டை, பிப். 12: கோடைகாலம் துவங்கவுள்ள நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் திருக்கட்டளை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தண்ணீர் தேவை குறித்தும், தண்ணீரை சட்டவிரோதமாக பயன்படுத்துவோர் குறித்தும் ஊராட்சி தலைவர் ஜெயபால் ஆய்வு செய்தார். அப்போது பொதுமக்களிடையே தண்ணீர் தேவை குறித்த அறிவுரையும், தண்ணீரை மின்மோட்டார் மூலம் உறிஞ்சி எடுப்போருக்கு எச்சரிக்கையும் கொடுக்கப்பட்டது. இந்த ஆய்வின்போது ஊராட்சி மன்ற துணைத்தலைவர் ராமசந்திரன், ஊராட்சி செயலாளர் பாலாஜி உடனிருந்தனர்.

Tags : Panchayat leader ,area ,
× RELATED சொத்தை எழுதி வைக்க மறுத்ததால்...