×

திருமயம் பகுதி தேசிய சாலை சந்திப்பில் எரியாத உயர் கோபுர மின்விளக்குகள்

திருமயம், பிப். 12: திருமயம் பகுதியில் உள்ள தேசிய சாலை முக்கிய சாலை சந்திப்பில் உள்ள உயர் கோபுர மின்விளக்குகள் எரியாததால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் இருந்து காரைக்குடி, மதுரை, புதுக்கோட்டை, ராயவரம் செல்லும் சாலைகள் திருச்சி- காரைக்குடி தேசிய சாலையில் சந்திக்கிறது. இந்த சாலைகளில் போக்குவரத்து அதிகம் இருப்பதால் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் தேசிய சாலையை கடக்க சிரமம் ஏற்படும் என கருதி இந்த 4 சந்திப்பு சாலைகளிலும் தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் உயர் கோபுர மின்விளக்குகள் பொருத்தப்பட்டது. இது அப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு நிம்மதியளித்த நிலையில் தொடர் பராமரிப்பு இல்லாததால் அடிக்கடி விளக்குகள் பழுதடைந்து வருகிறது.

அவ்வாறு பழுதடையும் மின்விளக்குகளை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் அப்பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுவதோடு இரவு நேரங்களில் தேசிய சாலையில் அசுர வேகத்தில் வரும் வாகனத்தை கணிக்க முடியாமல் வாகன ஓட்டிகள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
மேலும் தேசிய சாலை யார் கட்டுப்பாட்டில் இருக்கிறது, இதுபற்றி யாரிடம் முறையிடுவது என தெரியாமல் அப்பகுதி மக்கள் தவித்து வருகின்றனர். இதுபற்றி திருமயம் அருகே உள்ள சுங்கசாவடியில் தெரிவித்தாலும் அவர்கள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லையென வாகன ஓட்டிகள் வேதனை தெரிவித்துள்ளனர். எனவே திருமயம் பகுதியில் உள்ள தேசிய சாலை சந்திப்புகளில் உள்ள உயர் கோபுர மின்விளக்குகளை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதோடு தேசிய சாலையில் உள்ள குறைகளை அப்பகுதி மக்கள் தெரிவிக்க திருமயத்தில் தேசிய சாலை புகார் மையம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வாகன ஓட்டிகள் அவதி
தொடர்ந்து வலியுறுத்தியும் பயனில்லை தணிக்கையாளர் தங்கதுரை கூறியதாவது: நுகர்பொருள் வினியோகஸ்கர்கள் ஒரு பொருளை வினியோகம் செய்யும்போது அவர்களுக்கு அதில் குறைந்தளவே லாபம் கிடைக்கின்றன. அந்த லாபமும் 10 ரூபாய் நாணயமாக அவர்களுக்கு கிடைத்து விடுகின்றன. அவ்வாறு கிடைக்கும் 10 ரூபாய் நாணயங்களை வங்கிகளில் செலுத்த முடியாதததால் வினியோகஸ்கர்களிடம் பல ஆயிரம் மதிப்புள்ள 10 ரூபாய் நாணயங்கள் குவிந்து கிடக்கின்றன.இதேபோல் பல கடைகளிலும் 10 ரூபாய் நாணயத்தை தொடர்ந்து வாங்க மறுத்து வருகின்றனர். 10 ரூபாய் நாணயங்களை வங்கிகள், கடைக்காரர்கள் வாங்க வேண்டுமென ரிசர்வ் வங்கி தொடர்ந்து வலியுறுத்தினாலும் வங்கிகள் கூட ஏற்று கொள்வில்லை என்றார்.

Tags : area ,road junction ,Thirumayam ,
× RELATED பூச்சி மேலாண்மை குறித்து வேளாண்...