×

பொன்னமராவதியில் நெல் அறுவடை பணி தீவிரம்

பொன்னமராவதி, பிப். 11: பொன்னமராவதி பகுதியில் நெல் அறுவடை பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பொன்னமராவதி பகுதியில் நெல் அறுவடை பணி பரவலாக நடந்து வருகிறது. மழையை நம்பி நடவு செய்தவர்கள், போர்வெல் மூலம் நடவு செய்த விவசாயிகள் தற்போது கதிர் விளைந்து அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மைலாப்பூர், கண்டியாநத்தம், தூத்தூர், ஆலவயல், அம்மன்குறிச்சி, கல்லம்பட்டி, நகரப்பட்டி, திருக்களம்பூர், வார்பட்டு, ஒலியமங்களம், மேலத்தானியம், காரையூர், அரசமலை, நல்லூர், செவலூர், கோவனூர்,

மேலமேலநிலை, உசிலம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடவு செய்த குறைந்த அளவிலான விவசாயிகள் இப்போது கதிர் அறுடைக்கு ஆட்கள் மூலமாகவும், இயந்திரங்கள் மூலமாகவும் அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சிறிய இயந்திரம் மூலம் அறுவடை செய்து கதிரடிக்கும் இயந்திரம் மூலம் கதிர் அடித்தும் தாங்கள் சாகுபடி செய்த நெல் கதிர்களை அறுவடை செய்தும் வருகின்றனர்.

Tags :
× RELATED பொன்னமராவதி பேரூராட்சி குப்பை கிடங்கில் பயங்கர தீ